Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை நெடுஞ்சாலை பகுதியில் பூங்கா அமைக்கும் பணி மந்தம்

செங்கை நெடுஞ்சாலை பகுதியில் பூங்கா அமைக்கும் பணி மந்தம்

செங்கை நெடுஞ்சாலை பகுதியில் பூங்கா அமைக்கும் பணி மந்தம்

செங்கை நெடுஞ்சாலை பகுதியில் பூங்கா அமைக்கும் பணி மந்தம்

ADDED : மே 17, 2025 08:52 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதின்றம் பகுதியில், செங்கல்பட்டு - பொன்விளைந்தகளத்துார் சாலை சந்திப்பு மற்றும் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், செங்கல்பட்டு - மணப்பாக்கம் சாலையில், ஒழலுார் சந்திப்புகள் உள்ளன. இப்பகுதிகளில், அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது.

இதை தவிர்க்க, சந்திப்புகளில் சிக்னால் அமைக்க வேண்டும் என, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர்யிடம், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பின், மேற்கண்ட பகுதியில், நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, பூங்கா மற்றும் சிக்னல் அமைக்க, அரசுக்கு கருத்து அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், சாலை பாதுகாப்பிற்காக, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது. இப்பணிக்கு, டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாருக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் பணி ஆணை வழங்கினர்.

அதன்பின், பொன்விளைந்தகளத்துார் சாலை, ஒழலுார் சாலை ஆகிய பகுதிகளில், பசுமை பூங்கா அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்து பணி மார்ச் மாதம் துவங்கியது.

அதன்பின், பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us