Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

ADDED : பிப் 10, 2024 11:00 PM


Google News
அச்சிறுபாக்கம்:வடமணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம், 55. இவர், நேற்று தன் 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், திண்டிவனத்தில் இருந்து- ஒரத்தி நெடுஞ்சாலையில், வடமணிப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அனந்தமங்கலம் மலைக்கோவில் அருகே நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் சாலையோரம் இருந்த கல்லில் தலை மோதியதில், பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரத்தி போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us