Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்தி எதிரொலி ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் பாதசாரிகள் நிம்மதி

செய்தி எதிரொலி ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் பாதசாரிகள் நிம்மதி

செய்தி எதிரொலி ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் பாதசாரிகள் நிம்மதி

செய்தி எதிரொலி ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் பாதசாரிகள் நிம்மதி

ADDED : மார் 17, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
மறைமலைநகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.

இந்த சாலையில் கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

தற்போது பணிகள் நிறைந்து, வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற போது, சாலை சந்திப்புகளில் இருந்த அனைத்து சிக்னல்களும் அகற்றப்பட்டன.

பணிகள் நிறைவு அடைந்த பகுதிகளில் மீண்டும் சிக்னல் அமைக்கப்படாததால், அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக மறைமலைநகர் பேரமனுார் போர்டு கார் தொழிற்சாலை சந்திப்பில், அதிக அளவில் சாலையை கடக்கும் பாதசாரிகள், விபத்தில் சிக்கி வந்தனர்.

அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வந்தன. எனவே, இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, மறைமலைநகர் நகராட்சி சார்பில்,'நமக்கு நாமே திட்டம் 2023--24'ம் கீழ், பொது மக்கள் பங்களிப்பு நிதி 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சேர்த்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த பகுதியில் சிக்னல் அமைக்க, கடந்தாண்டு ஜூன் மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்ட பணிகள், ஏழு மாதங்கள் கடந்தும் ஆரம்ப கட்டத்திலேயே இருந்து வந்தது.

இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தற்போது போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us