Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பெருக்கரணையில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை

பெருக்கரணையில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை

பெருக்கரணையில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை

பெருக்கரணையில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை

ADDED : ஜன 29, 2024 04:14 AM


Google News
சித்தாமூர் : சித்தாமூர் அருகே உள்ள பெருக்கரணை கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், அச்சிறுபாக்கம் சாலை சந்திப்பு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

மேலும், பெருக்கரணையில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பேருந்து மூலம் வந்து செல்கின்றனர்.

பயணியர் வசதிக்காக, 30 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், பராமரிப்பு இல்லாததால், தற்போது நிழற்குடை சேதம் அடைந்து உள்ளது.

அதனால், மழை மற்றும் வெயில் நேரத்தில், நிழற்குடையில் நிற்க முடியாமல் பயணியர் சிரமப்படுகின்றனர்.

புதிய நிழற்குடை அமைக்க, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், செய்யூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us