Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : டிச 01, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்: அம்மணம்பாக்கம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் - திருப்போரூர் கூட்டு சாலை 3 கி.மீ., உள்ளது. இந்த சாலை வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.

இந்த சாலையை, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என, இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் அம்மணம்பாக்கம் சுடுகாடு பகுதியில் இருந்து, திருப்போரூர் சாலை இணைப்பு வரை பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம், புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us