/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்
மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்
மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்
மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்
ADDED : பிப் 25, 2024 01:35 AM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில். மாசி மக பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, 10ம் நாள் உற்சவமாக தெப்பல் திருவிழா நடந்தது. இதில், இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் கந்தபெருமான், வள்ளி, தெய்வானையருடன் எழுந்தருளி சரவண பொய்கையில் ஐந்து முறை வலம் வந்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் படிக்கட்டுகளில் கற்பூரம் தீபங்களை வெற்றிலையில் ஏற்றி வரவேற்றனர்.
முன்னதாக, பகல் 2:30 மணிக்கு, கந்தபெருமான் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 3:00 மணியளவில், கந்தபெருமான் சரவண பொய்கையில் எழுந்தருளி தீர்த்தவாரி ஆடினார். பின், காவடி மண்டபத்தில் கந்தபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதேபோல், கொளத்துாரில் உள்ள கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலிலும் மாசிமக தெப்பல் விழா நேற்று நடந்தது.
இரவு 7:00 மணியளவில் கல்யாண ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் தெப்பல் குளத்தில் எழுந்தருளி ஒன்பது முறை வலம் வந்தார்.