Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

ADDED : மே 20, 2025 12:29 AM


Google News
செம்மஞ்சேரி,செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் பழனி, 36. இவர், சோழிங்கநல்லுார், டி.என்.எச்.பி., காலனி சாலையில், டிபன் கடை நடத்தி வருகிறார்.

இவரது தங்கையின் கணவர் ரவி, 42. மனைவியை பிரிந்து வாழும் இவர், பழனி கடைக்குச் சென்று, 'நீ அடைக்கலம் கொடுப்பதால் தான், என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவில்லை' எனக் கூறியுள்ளார்.

இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடையில், கடாயில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது.

ஆத்திரமடைந்த ரவி, கடாயை துாக்கி அதிலிருந்த எண்ணெயை, பழனி உடலில் கொட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த பழனி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, ரவியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us