/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி
வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி
வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி
வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி
ADDED : மே 30, 2025 01:41 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், விழிப்புணர்வு பயிற்சி, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
'அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் இயக்குதலும் பராமரித்தலும்' என்ற தலைப்பில் இப்பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் வைத்திருப்போர் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இயந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.