Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/'உங்களை தேடி; உங்கள் ஊரில்' சிறப்பு முகாம்

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' சிறப்பு முகாம்

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' சிறப்பு முகாம்

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' சிறப்பு முகாம்

ADDED : ஜன 30, 2024 10:10 PM


Google News
செங்கல்பட்டு:திருப்போரூரில், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்ட முகாம், இன்று நடக்கிறது.

இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என, 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இத்திட்டத்தை செயலாக்கும் நோக்கில், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், திருப்போரூர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த சிறப்பு முகாம், இன்று மாலை 4:30 முதல்- மாலை 6:00 மணி வரை நடக்கிறது.

இதில், திருப்போரூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தோர் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us