/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள் ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ரேஷன் அரிசி கடத்தியோரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
ADDED : மே 21, 2025 02:25 AM

பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், 58வது வார்டு, நாகாத்தம்மன் கோவில் அருகில், கிருஷ்ணா சாலையில், கே.டி., 01, 02 மற்றும் 179 என்ற, மூன்று ரேஷன் கடைகள் இயங்குகின்றன.
நேற்று முன்தினம் இருவர், இந்த கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏற்றினர்.
சந்தேகமடைந்த பகுதிவாசிகள் ஒன்று சேர்ந்து, இருவரையும் மடக்கினர். அவர்கள் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் பெருங்களத்துாரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா, 33, முடிச்சூரைச் சேர்ந்த பரமசிவம், 44, என்பதும், பரமசிவம், ரேஷன் கடை தற்காலிக ஊழியர் என்பதும் தெரியவந்தது.
இருவரையும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின், இருவரும் கைது செய்யப்பட்டனர். 13 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.