Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : மே 21, 2025 09:57 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வாயிலாக, 'நாசா'வின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா நினைவாக, தமிழகத்தைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு, கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு பதக்கத்துடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்க, https;//www.awards.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில், வரும் ஜூன் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் பின், விண்ணப்பித்த நகலுடன், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தில், நேரில் தொடர்பு கொண்டு, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us