Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அபாய ஆப்பூர் கல்குவாரி பள்ளம் இரும்பு தடுப்பு வேலி அவசியம்

அபாய ஆப்பூர் கல்குவாரி பள்ளம் இரும்பு தடுப்பு வேலி அவசியம்

அபாய ஆப்பூர் கல்குவாரி பள்ளம் இரும்பு தடுப்பு வேலி அவசியம்

அபாய ஆப்பூர் கல்குவாரி பள்ளம் இரும்பு தடுப்பு வேலி அவசியம்

ADDED : மே 16, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி பள்ளம் உள்ளது.

இது, 500 அடி வரை ஆழம் உடையது. இதில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், இங்கு வார இறுதி நாட்களில் குளிக்க வருகின்றனர்.

அவ்வாறு வரும் இளைஞர்கள், காடுகளுக்கு அருகில் அடுப்பு மூட்டி, சமையல் செய்து சாப்பிட்ட பின், மது போதையில் கல் குவாரி பள்ளத்தில் குளித்து வருகின்றனர்.

மேலும், கல் குவாரி பள்ளம் குறித்து விழிப்புணர்வு இல்லாத பெற்றோரும், குழந்தைகளுடன் வந்து துணி துவைப்பது, நீச்சல் பழகுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், இந்த கல்குவாரி பள்ளங்களில் ஆபத்தான வகையில் பொதுமக்கள் குளிப்பதை தடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

இந்த கல் குவாரி பள்ளம் அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால், ஆபத்து காலங்களில் காப்பாற்ற கூட ஆட்கள் யாரும் இல்லை. இதில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யும் போது, யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த ஆண்டு மது போதையில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தார்.

எனவே, இந்த கல்குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கவும், எச்சரிக்கை பலகை வைத்து, யாரும் அருகில் செல்ல முடியாதபடியும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us