Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கை மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

செங்கை மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

செங்கை மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

செங்கை மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

ADDED : ஜன 24, 2024 09:23 PM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து, காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த காய்கறிகளை, புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை வியாபாரிகள் வாங்கி சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.

வியாபாரிகள் கூறியதாவது:

தை மாத துவக்கத்திலேயே தொடர்ச்சியாக முகூர்த்த நாட்கள் வருவதால், காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. அதிகபட்சமாக, வெண்டைக்காய் மொத்த விலையில், கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us