Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கால்நடைகள் திருட்டு அதிகரிப்பு போலீசார் ரோந்து வர வேண்டுகோள்

கால்நடைகள் திருட்டு அதிகரிப்பு போலீசார் ரோந்து வர வேண்டுகோள்

கால்நடைகள் திருட்டு அதிகரிப்பு போலீசார் ரோந்து வர வேண்டுகோள்

கால்நடைகள் திருட்டு அதிகரிப்பு போலீசார் ரோந்து வர வேண்டுகோள்

ADDED : மே 23, 2025 02:33 AM


Google News
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் விவசாயத்துடன், பலர் மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர்.

இதில் காயரம்மேடு, சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம், கருநிலம், கொளத்துார், பேரமனுார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.

மேய்ச்சலுக்கு ஆடுகளை மலைகள் மற்றும் அறுவடை முடிந்த வயல்களுக்கு ஓட்டிச் செல்வர்.

இவ்வாறு ஓட்டிச் செல்லும் போது, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வரும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு, ஆடு மேய்ப்பவர் அசந்த நேரத்தில், ஆடுகளை திருடிச் செல்கின்றனர்.

இரவு நேரங்களில், மாடுகளையும் திருடிச் செல்கின்றனர். அவர்கள் வாகனங்களில் செல்வதால், துரத்திப் பிடிக்க முடிவதில்லை.

ஆடு, மாடுகள் திருடப்படுவது குறித்து எந்த காவல் நிலையத்திலும் புகார் அளித்தாலும், புகார் பெற்று வழக்கு பதிவு செய்யப்படுவது இல்லை.

இதன் காரணமாக பலர், புகார் அளிக்க காவல் நிலையம் செல்வதில்லை. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாடு வளர்ப்போர் கூறியதாவது:

புறநகரை சுற்றியுள்ள கிராமங்களில், அடிக்கடி ஆடு மற்றும் மாடுகள் திருடப்பட்டு வருகின்றன. கருநிலம் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில், நான்கு மாடுகள் திருடப்பட்டு உள்ளன. கிராமங்களில், உள்ளூர் நபர்கள் சிலரின் துணையுடன் திருடப்படும் மாடுகள், வெளியூர் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, 10,000 முதல் 40,000 வரை விற்கப்படுகின்றன.

பெரும்பாலான மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டு, சுற்றியுள்ள காப்புக்காடுகளில் வெட்டப்பட்டு, இறைச்சியாக விற்கப்படுகின்றன. இதை தடுக்க, போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us