Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/காஞ்சியில் பள்ளத்தில் செல்லும் வீடுகள்

காஞ்சியில் பள்ளத்தில் செல்லும் வீடுகள்

காஞ்சியில் பள்ளத்தில் செல்லும் வீடுகள்

காஞ்சியில் பள்ளத்தில் செல்லும் வீடுகள்

ADDED : பிப் 25, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில், மாநகராட்சி சார்பில், புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆனால், பழைய சாலையை அகற்றாமல், அதன் மேலேயே புதிதாக சிமென்ட் சாலை அமைப்பதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் அரை அடி வரை பள்ளத்தில் சென்றுள்ளது.

இது, கோடைக் காலங்களில் எவ்வித பிரச்னைகளும் வராது. அதுவே, மழைக்காலத்தில் தெருக்களில், மழைநீர் வீடுகளில் புகுந்து வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.

இதுதவிர, ராஜகுளம்- -- கரூர் கிராமம் இடையே தரைப்பாலத்தின் மீது, சிமென்ட் சாலை மீது, மற்றொரு சிமென்ட் சாலை போட்டனர். இதுபோன்ற கண்துடைப்பு செயலால், மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, பணிகளும் தரமில்லாது போகும் சூழல் உருவாகி உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us