Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குறைதீர் கூட்டம் 26 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 26 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 26 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 26 மனுக்கள் ஏற்பு

ADDED : மே 23, 2025 09:43 PM


Google News
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று, விவசாயிகள் குறைதீர் கூட்டம், பொறுப்பு வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.

வருவாய் கோட்டாட்சியர் ரம்யா முன்னிலை வகித்தார். மதுராந்தகம் ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நெல்கொள் முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்.

அச்சிறுபாக்கம், மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும்.

மதுராந்தகம், செய்யூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏரிகளில் பழுதாகி உள்ள பாசன மதகு மற்றும் பாசன கால்வாய் என உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 25க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றது.

இதில், பொதுப்பணித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் என துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us