Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாப்பநல்லுாரில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

பாப்பநல்லுாரில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

பாப்பநல்லுாரில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

பாப்பநல்லுாரில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

ADDED : செப் 12, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:பாப்பநல்லுாரில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் அருகே பாப்பநல்லுார், திருவேங்கடபுரம், கோழியாளம், தீட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்று நீர் பாசனம் மற்றும் ஏரி நீர் பாசனம் மூலமாக, 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, நெல் அறுவடை செய்யும் பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை செய்த நெல்லை, பாப்பநல்லுாரில் உள்ள நெற்களம் மற்றும் தங்களது வீடுகளில், விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக, எதிர்பாராத நேரங்களில் திடீரென மழை பெய்து வருவதால், களத்துமேட்டில் உள்ள நெல்லை பாதுகாக்க முடியாமல், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, பாப்பநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, கலெக்டர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us