Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விவசாயிகள் சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விவசாயிகள் சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விவசாயிகள் சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விவசாயிகள் சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

ADDED : பிப் 23, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு, 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் துவங்கிஉள்ளன.

அதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், நடைபயணம், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு, சாலைகளில் கஞ்சி காய்ச்சுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். ஆனால், சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை.

அவர்களுக்கு 1 சென்ட் நிலம் கூட இல்லை என பேசியதாக, விவசாயிகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், சிப்காட் திட்டத்தை கைவிடக் கோரியும், 19 பெண்கள் உட்பட 23 பேர், நேற்று முன்தினம் முதல்வரை சந்திக்க தலைமை செயலகம் சென்றனர்.

அப்போது அவர்களை தடுத்த போலீசார், அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின், இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர்.

அப்போது, போலீசாரின் அராஜகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதோடு, பேருந்து நிலைய நுழைவாயிலில் இருந்த கலைஞர் சிலையிடம் கோரிக்கை மனுக்களை அளித்து, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us