/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : ஜன 28, 2024 04:10 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது.
இங்கு, முதலாவது தளத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.