Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ADDED : ஜன 28, 2024 04:10 AM


Google News
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:

செங்கல்பட்டு, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது.

இங்கு, முதலாவது தளத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us