Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பவுஞ்சூர் பஜார் வீதி சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

பவுஞ்சூர் பஜார் வீதி சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

பவுஞ்சூர் பஜார் வீதி சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

பவுஞ்சூர் பஜார் வீதி சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 27, 2025 08:05 PM


Google News
பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஊராட்சியில் மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பஜார் வீதி உள்ளது.

இப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம்,வேளாண்மைத் துறை அலுவலகம், அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, சந்தை, வங்கி போன்றவை செயல்படுகின்றன.

அத்துடன் இப்பகுதியில், ஏராளமான கடைகள் உள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர்.தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையின் மொத்த அகலம், 11 அடி மட்டுமே உள்ளதால் கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர சிரமமாக உள்ளது.

முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயற்சிக்கும் போது, விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், பஜார் வீதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை, சாலையில் தாறுமாறாக நிறுத்துவதாலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவாத்துார் கிராமத்திற்குச் செல்லும் சாலை சந்திப்பில், காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

துறை சார்ந்த அதிகாரிகள் பஜார் சாலையை ஆய்வு செய்து, விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us