ADDED : பிப் 06, 2024 04:04 AM
செங்கல்பட்டு, : சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் போஸ், 60. இவர், நேற்று முன்தினம் செங்கல்பட்டு நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் தன் 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பரனுார் ரயில்வே மேம்பாலம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.