Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலை நெடுகிலும் குப்பை வாகன ஓட்டிகள் அவதி

சாலை நெடுகிலும் குப்பை வாகன ஓட்டிகள் அவதி

சாலை நெடுகிலும் குப்பை வாகன ஓட்டிகள் அவதி

சாலை நெடுகிலும் குப்பை வாகன ஓட்டிகள் அவதி

ADDED : செப் 10, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் குப்பை கிடங்கு எதிரே, நெடுஞ்சாலையில், குப்பை பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை 25 கி.மீ., நீளம் உடையது. சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையை ஒட்டி கொளத்துார் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து லாரிகள் வாயிலாக குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலையின் இருபுறமும் குப்பைகள் பரவியுள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும் போது, குப்பைகள் பறந்து சக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us