Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனம் செல்ல கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனம் செல்ல கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனம் செல்ல கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனம் செல்ல கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

ADDED : ஜூன் 18, 2025 10:41 PM


Google News
செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

செய்யூர் பஜார் பகுதியில் மூன்று அரசு பள்ளி மற்றும் ஏழு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. புத்துார், அம்மனுார், செங்காட்டூர், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதியில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்-மாணவியர் சைக்கிள், வேன், பேருந்துகள் வாயிலாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுகின்றன.

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து லாரிகள் வாயிலாக ஜல்லிகள் மற்றும் எம்-சாண்ட் கட்டுமானப்பணிக்காக, சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

தினமும் அதிகப்படியான லாரிகள் செய்யூர் பஜார் பகுதியில் செல்வதால், காலை மற்றும் மாலை வேலைகளில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவியர் சாலையில் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர்.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் காலை, மாலை வேலைகளில் செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us