/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கைபாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 28, 2024 04:09 AM

மதுராந்தகம்: புதுப்பட்டு ஊராட்சியில் உள்ள பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம் ஒன்றியத்தில் புதுப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, பள்ளி கட்டடம் அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டடம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழமையானதால், பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. தற்போது, 'இ -- சேவை' மையத்தில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து, பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட பழைய கட்டடம், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது.
எனவே, பாழடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.