Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு கலை கல்லுாரியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்

அரசு கலை கல்லுாரியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்

அரசு கலை கல்லுாரியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்

அரசு கலை கல்லுாரியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்

ADDED : ஜூன் 28, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இங்கு, வகுப்பறையில் இட நெருக்கடியுடன் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதனால், கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என, அரசு மற்றும் கல்லுாரி இயக்குநர் ஆகியோருக்கு, கல்லுாரி நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.

அதன் பின், கல்லுாரி வளாகத்தில், 10 வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை கட்ட, 5.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கு, பொதுப்பணித் துறையினர் 'டெண்டர்' விட்டதில், தனியார் ஒப்பந்ததாரர் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து, வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, கடந்த மாதம் 20ம் தேதி துவக்கி வைத்தார்.

அதன் பின் தற்போது, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்படும் என, பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us