Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருள், பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருள், பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருள், பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருள், பணம் திருட்டு

ADDED : பிப் 11, 2024 11:33 PM


Google News
மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் அருகே கிளியா நகரில், இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து, பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேல்மருவத்துார் காவல் எல்லைக்கு உட்பட்ட கிளியா நகரில், திரவுபதி அம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, இந்த இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களான தாம்பூல தட்டு, கோவில் மணி, விளக்கு மற்றும் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து, 30,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றனர்.

இது குறித்து, நேற்று மேல்மருவத்துார் போலீசில், ஊர் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us