ADDED : மே 18, 2025 09:44 PM
மதுராந்தகம்:பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, மதுராந்தகம் பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி, நடந்தது.செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.
பேரணியில், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்த,'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மதுராந்தகம் தேரடி தெருவில் துவங்கி பஜார் வீதி, மருத்துவமனை சாலை வழியாக பேரணி நடந்தது.
இதில், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.