Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை நகராட்சிக்கு பணியாளர்கள் நியமனம்

மாமல்லை நகராட்சிக்கு பணியாளர்கள் நியமனம்

மாமல்லை நகராட்சிக்கு பணியாளர்கள் நியமனம்

மாமல்லை நகராட்சிக்கு பணியாளர்கள் நியமனம்

ADDED : மார் 26, 2025 07:37 PM


Google News
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. இங்கு பணியாற்றிய பொறியாளர், பணி ஆய்வாளர், பதிவறை எழுத்தர், வரி தண்டலர் உள்ளிட்டோர், பிற பேரூராட்சிகளுக்கு மாற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சி கமிஷனராக பணியாற்றிய சுவிதாஸ்ரீ, மாமல்லபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு, 9ம் தேதி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, இந்நகராட்சியின் இளநிலை உதவியாளர்களாக, மறைமலைநகர் நகராட்சி வருவாய் உதவியாளர் சுபலட்சுமி, செங்கல்பட்டு வருவாய் உதவியாளர் விக்னேஷ் மற்றும் வருவாய் உதவியாளராக, மறைமலைநகர் நகராட்சி வருவாய் உதவியாளர் பாலமுருகன் ஆகியோரை நியமித்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us