/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணி மந்தம்செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணி மந்தம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணி மந்தம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணி மந்தம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணி மந்தம்
ADDED : பிப் 10, 2024 10:21 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில் செல்கின்றன.
இங்கிருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் சென்று வருகின்றனர்.
இந்த வளாகத்தில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் தனியாக உள்ளன. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே, ரயில் நிலைய நடைமேடை பகுதியில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள, அம்ரித் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் நரநே்திர மோடி காணொலி காட்சி வாயிலாக, கடந்த ஜூலை 12ம் தேதி துவக்கி வைத்தார்.
இப்பணிகளை, 150 நாட்களில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கான பணிகள் துவங்கியது.
அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் முழுமையாக பணிகள் மேற்கொள்ள, பயணியருக்கு மாற்று பாதை அமைத்துதர வேண்டும் என ஒப்பந்ததாரர்கள், ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.
அதன்பின், இரண்டாவது நடைமேடை கடைசி பகுதியில் இருந்து, மின்வாரியம் வழியாக பேருந்து நிலையத்திற்கு பயணியர் சென்றுவர வழி ஏற்படுத்தினர்.
தற்போது, இந்த வழியாக பயணியர் சென்று வருகின்றனர். ஆனால், ரயில் நிலைய வளாகத்தில் அலுவலக கட்டட பணி, வளாக சீரமைப்பு பணிகள் துவங்கி, மந்தமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு பணி செய்ய, பணிகள் துவங்கி மந்தமாக நடைபெற்று வருகின்றன. மாற்றுப்பாதையில் முதியவர்கள், மாற்றுத்திறானளிகள் சென்றுவர சிரமப்படுகின்றனர். இதனால், பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.கே.வெங்கடேசன், ரயில் பயணி, செங்கல்பட்டு.