Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தனியார் தொழிற்சாலை பஸ் மைய தடுப்பில் மோதி விபத்து

தனியார் தொழிற்சாலை பஸ் மைய தடுப்பில் மோதி விபத்து

தனியார் தொழிற்சாலை பஸ் மைய தடுப்பில் மோதி விபத்து

தனியார் தொழிற்சாலை பஸ் மைய தடுப்பில் மோதி விபத்து

ADDED : ஜூன் 07, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:சிங்க பெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து, நேற்று அதிகாலை காலியாக, ஒரகடம் நோக்கி சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் சென்றது.

ஆப்பூர் மாந்தோப்பு அருகில் அதிவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள மைய தடுப்பு மற்றும் மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. விபத்து ஏற்பட்டு 4 மணி நேரம் வரை, சாலை மைய தடுப்பில் இருந்து, பேருந்து அகற்றப்படாமல் இருந்தது.

அந்த நேரத்தில், சாலையில் வேறு வாகனங்கள் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்படி வந்த பாலுார் போலீசார், பேருந்தை அங்கிருந்து அகற்றி, காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us