Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிணற்றில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

கிணற்றில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

கிணற்றில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

கிணற்றில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

ADDED : மார் 18, 2025 12:38 AM


Google News
பவுஞ்சூர்; பவுஞ்சூர் அடுத்த பரமேஸ்வரமங்கலம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல், 21. இவர், நேற்று நண்பர்களுடன் சோழக்காட்டில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றார்.

வெற்றிவேலுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது, தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்தவர்கள், அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. உடனே, கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற செய்யூர் தீயணைப்பு மீட்புப் படையினர், கிணற்றில் மூழ்கிய வெற்றிவேல் உடலை மீட்டனர்.

அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து, வாலிபரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us