Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாடுகளை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மாடுகளை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மாடுகளை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மாடுகளை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ADDED : ஜூன் 25, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, மாடுகளை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

மதுராந்தகம் அடுத்த எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45.

இவருக்குச் சொந்தமான நான்கு மாடுகள் மற்றும் வீரப்பன் என்பவருக்குச் சொந்தமான ஒரு மாடு என, ஐந்து மாடுகளை நேற்று முன்தினம், அரசர் கோவில் அடுத்த செட்டிமேடு பகுதி பாலாற்றங்கரையில் மேய்த்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், மேய்ந்து கொண்டிருந்த ஐந்து மாடுகளின் உடல் பகுதிகள் மற்றும் வால் பகுதிகளில், கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதனால், மாடுகள் வலி தாங்காமல் கத்திய சத்தம் கேட்டு, ஆறுமுகம் மற்றும் வீரப்பன் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு, மாடுகள் வெட்டுப்பட்டு ரத்தக் காயங்களுடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், கால்நடைத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, மாடுகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின், மாட்டின் உரிமையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின்படி, படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us