ADDED : பிப் 25, 2024 01:36 AM
செம்பியம்:மணலி, சின்னமாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா, 57. உறவினர் திருமணத்திற்கு சென்ற இவர், ரயிலில் வந்து பெரம்பூர் நிலையத்தில் இறங்கினார்.
அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய போது, அவர் வைத்திருந்த நகை பை காணாமல் போனது தெரிந்தது.
அதில், 6 மற்றும் 3 சவரனில் இரண்டு செயினும், 2,000 ரூபாயும் இருந்துள்ளது.
இதுகுறித்து, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போலீசார் விசாரிக்கின்றனர்.