/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்
தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்
தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்
தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்
ADDED : ஜன 28, 2024 04:10 AM
தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையரகத்தில், ஆறு இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், சிட்லப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல், மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமார், மத்திய குற்றப்பிரிவுக்கும்; பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம், மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் வெங்கடேசன், பள்ளிக்கரணை குற்றப்பிரிவு; மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ், மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.