Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 52 திருமணத்தால் நெரிசல்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 52 திருமணத்தால் நெரிசல்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 52 திருமணத்தால் நெரிசல்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 52 திருமணத்தால் நெரிசல்

ADDED : ஜூன் 07, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.

நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால், இக்கோவிலில் திருமணம் செய்ய, 52 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

மேலும், வேண்டுதலின் காரணமாக முன்பதிவு செய்யாமல், பலர் திருமணம் செய்ய வந்திருந்தனர்.

இதன் காரணமாக, கோவிலில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக நின்று, திருமணம் செய்தனர்.

திருமணத்திற்கு வந்தவர்கள் பலரும், தங்களது கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை, கோவிலைச் சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் நிறுத்தி விட்டுச் சென்றனர்.

மாடவீதிகளில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்களில் வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், திருமணங்களுக்கு வந்தவர்களும் தங்கள் வாகனங்களை, சாலையோரம் நிறுத்தினர்.

இதன் காரணமாக, ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் திருமணம் முடித்து, கந்தசுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றனர்.

அதன்படி, நேற்று ஒரே நாளில் மட்டும், 20,000க்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us