Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிங்கபெருமாள் கோவில் அருகே விவசாயி வீட்டில் 45 சவரன் கொள்ளை

சிங்கபெருமாள் கோவில் அருகே விவசாயி வீட்டில் 45 சவரன் கொள்ளை

சிங்கபெருமாள் கோவில் அருகே விவசாயி வீட்டில் 45 சவரன் கொள்ளை

சிங்கபெருமாள் கோவில் அருகே விவசாயி வீட்டில் 45 சவரன் கொள்ளை

ADDED : ஜூலை 02, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
சிங்கபெருமாள் கோவில், ஜூலை 2--

சிங்கபெருமாள் கோவில் அருகே, விவசாயி வீட்டில் 45 சவரன்தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 67; விவசாயி.

நேற்று முன்தினம் மாலை கன்னியப்பன், மாடு வாங்க வேலுார் சந்தைக்குச் சென்றுள்ளார்.வீட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி, 54, மற்றும்அவரது மகள் இருந்து உள்ளனர்.

இவர்கள் இருவரும், வீட்டின் முன்பக்கம் உள்ள வராண்டாவில் துாங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில் விஜயலட்சுமி எழுந்து, பின் பக்கம் உள்ள கழிப்பறைக்குச் சென்ற போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டது தெரிந்தது.

வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, அறையில் பீரோவில் வைத்திருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் எட்டு பட்டுப்புடவைகளும் கொள்ளை போனது தெரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.

விஜயலட்சுமி அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

புறநகரை ஒட்டியுள்ள ஆப்பூர், ஆத்துார், திருக்கச்சூர் கிராமங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us