/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குறைதீர்வு கூட்டத்தில் 344 மனு ஏற்பு குறைதீர்வு கூட்டத்தில் 344 மனு ஏற்பு
குறைதீர்வு கூட்டத்தில் 344 மனு ஏற்பு
குறைதீர்வு கூட்டத்தில் 344 மனு ஏற்பு
குறைதீர்வு கூட்டத்தில் 344 மனு ஏற்பு
ADDED : செப் 23, 2025 12:20 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நேற்று நடந்த மக்கள் நலன் காக்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 334 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொழில் துவங்க வங்கிக் கடன், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 344 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஈமச்சடங்கிற்கான நிதியை, கலெக்டர் வழங்கினார்.
அப்போது, கே.கே.நெல்வாய் கிராம மக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனு விபரம் வருமாறு:
லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், கே.கே.நெல்வாய் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதனால், கடுமையாக பாதிக்கப்படுகிறோம். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.