ADDED : ஜூன் 09, 2024 01:46 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 44; விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு, இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது, நள்ளிரவில் பாம்பு கடித்ததில், ஆபத்தான நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.