Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

ADDED : ஆக 02, 2024 02:03 AM


Google News
அச்சிறுபாக்கம்:சிறுதாமூர் கூட்டு சாலையில் உள்ள பயணியர் நிழற்கூரை சீரமைக்கப்படாததால், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த கூட்டு சாலைப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.

தற்போது, அந்த நிழற்கூரை உரிய பராமரிப்பின்றி, விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.

நிழற்குடையை சீரமைக்க வேண்டி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பல முறை புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us