Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புதிய குடிநீர் தேக்க தொட்டி நெற்குணத்தில் அமைக்கப்படுமா?

புதிய குடிநீர் தேக்க தொட்டி நெற்குணத்தில் அமைக்கப்படுமா?

புதிய குடிநீர் தேக்க தொட்டி நெற்குணத்தில் அமைக்கப்படுமா?

புதிய குடிநீர் தேக்க தொட்டி நெற்குணத்தில் அமைக்கப்படுமா?

ADDED : ஜூன் 06, 2024 12:50 AM


Google News
சித்தாமூர்:சித்தாமூர் அருகே நெற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட வயலுார் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

குளக்கரை அருகே, அப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டிஅமைக்கப்பட்டது.

குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாககுடிநீர் வினியோகம்செய்யப்பட்டு வருகிறது.

முறையான பராமரிப்புஇல்லாமல், நாளடைவில் மேல்நிலைத் தேக்கத்தொட்டி சேதமடைந்து, தொட்டியை தாங்கிநிற்கும் துாண்கள் விரிசல்அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மேல்நிலைத் தேக்கத்தொட்டி முற்றிலும் இடிந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us