Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரியனுார் நியாய விலை கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

அரியனுார் நியாய விலை கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

அரியனுார் நியாய விலை கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

அரியனுார் நியாய விலை கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

ADDED : ஜூன் 26, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
செய்யூர், செய்யூர் அடுத்த அரியனுார் ஊராட்சியில், திரவுபதி அம்மன் கோவில் எதிரே, நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.

இந்த நியாய விலைக்கடை கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், முறையான பராமரிப்பு இன்றி, நாளடைவில் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்தும், மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும் மோசமான நிலையில் இருந்தது.

மழைக் காலங்களில், மேல் தளத்தில் தண்ணீர் ஒழுகி பெருக்கெடுத்து, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்து பாதிக்கப்பட்டன.

அதனால், சில மாதங்களுக்கு முன், அருகே உள்ள ஓடு போட்ட சமுதாய நலக்கூட கட்டடத்திற்கு நியாய விலை கடை மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.

நாளடைவில், அந்த கட்டடமும் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பழைய நியாயவிலைக் கடை கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் புது கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us