ADDED : ஜூலை 15, 2024 04:36 AM
திருமங்கலம் : செங்குன்றத்தில் இருந்து நேற்று காலை தனியார் குடிநீர் லாரி ஒன்று, தண்ணீரை நிரப்பிக் கொண்டு கோயம்பேடு நோக்கி அதிவேகமாக சென்றது.
திருமங்கலம் மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பில் மோதி கவிழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கவிழ்ந்த லாரியின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றார்.
திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.