Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

ADDED : ஜூலை 15, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில், பூஞ்சேரி, தனி வருவாய் கிராமமாக உள்ளது. பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தோர் நிலம், வீட்டுமனை பட்டா, அரசு நலத்திட்ட உதவி சான்று உள்ளிட்ட தேவைகளுக்காக, கிராம நிர்வாக அலுவலகம் வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடத்தின் சுவர் விரிசல் அடைந்து, கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, கதவு, ஜன்னல்கள் சேதமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மேலும் சீரழிந்து வருகிறது.

இந்த கட்டடத்தில் போதிய இடவசதியும் இல்லை. மழைநீர் உட்புகுந்து, பதிவேடுகளை பாதுகாக்க சிரமப்படுகின்றனர். கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us