/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது
காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது
காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது
காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது
ADDED : ஜூலை 16, 2024 04:27 AM
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம் காயரம்பேடு ஊராட்சி பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு புகார் வந்தது.
அதனை தொடர்ந்து, அங்கு சென்று பார்வையிட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒத்திவாக்கம் பகுதியை சேர்ந்த நரேஷ், 19, தைலாவரம் பகுதியை சேர்ந்த விமல், 20, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.