Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வீடு புகுந்து மொபைல் திருடிய இருவர் கைது

வீடு புகுந்து மொபைல் திருடிய இருவர் கைது

வீடு புகுந்து மொபைல் திருடிய இருவர் கைது

வீடு புகுந்து மொபைல் திருடிய இருவர் கைது

ADDED : ஜூன் 26, 2024 01:14 AM


Google News
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் இந்துமதி, 24. ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 21ம் தேதி இரவு, காற்று வரவில்லை என, வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கி உள்ளார். காலை எழுந்து பார்த்த போது, அவரது மொபைல் போன் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து, இந்துமதி மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் இதே பகுதியில் சிலரின் மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மேகநாதன், 36, அவரது கூட்டாளி வேலுார் மாவட்டம், சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன், 25, ஆகியோர், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டதுதெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us