Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகத்தில் சாலை விபத்து: மனைவி பலி;- கணவர் படுகாயம்

மதுராந்தகத்தில் சாலை விபத்து: மனைவி பலி;- கணவர் படுகாயம்

மதுராந்தகத்தில் சாலை விபத்து: மனைவி பலி;- கணவர் படுகாயம்

மதுராந்தகத்தில் சாலை விபத்து: மனைவி பலி;- கணவர் படுகாயம்

ADDED : ஜூலை 07, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம் : செய்யூர் அடுத்த மேட்டுப்பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார், 52, அவரின் மனைவி மங்கல லட்சுமி, 46.

இருவரும், தொழுப்பேடு அடுத்த இரட்டைமலை சந்திப்பு அருகே, ஹோண்டா யுனிகார்ன் இருசக்கர வாகனத்தில், அச்சிறுபாக்கம் நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து, சென்னை நோக்கி அதிவேகமாக வந்த சுசுகி எர்டிகா கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், மங்கலலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், படுகாயம் அடைந்த குமாரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் 4 கி.மீ., துாரம், அச்சிறுபாக்கம் வரை ஓட்டி சென்றுள்ளனர்.

பின், இருசக்கர வாகனத்தில் விரட்டி வரும் மக்களை கண்டதும், காரை வெங்கடேசபுரம் நுழைவுவாயில் அருகே நிறுத்திவிட்டு தலைமறைவாகினர்.

காரை பறிமுதல் செய்த அச்சிறுபாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு, தலைமறைவான கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us