Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு

பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு

பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு

பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு

ADDED : ஜூலை 12, 2024 12:58 AM


Google News
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை யைச் சேர்ந்தவர், தனுஷ் 21. கடந்த 6ம் தேதி, இரவு 7:00 மணிக்கு கடைத்தெருவுக்கு சென்று வருவதாகக் கூறி, வீட்டில் இருந்து புறப்பட்ட தனுஷ் மீண்டும்திரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 7ம் தேதி, அவரது பெற்றோர், வாலாஜாபாத் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, ஏகனாம்பேட்டை அடுத்த, கோயம்பாக்கம்பாலாற்றங்கரையை யொட்டிய ஆற்று மண்ணில் ஆண் ஒருவரது கால் மட்டும் வெளியே தெரியும்படி புதைந்த நிலையில் இருப்பதை அப்பகுதியினர் கண்டனர். வாலாஜாபாத் போலீசார் அப்பகுதிக்கு வந்து, பாலாற்றில் புதைந்திருந்த ஆண் சடலத்தை மீட்டெடுத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர் கடந்த 6ம் தேதி காணாமல் போன அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார்விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us