Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கேணியம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

செங்கேணியம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

செங்கேணியம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

செங்கேணியம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

ADDED : ஜூன் 14, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிப்புண்ணியம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த கிராமத்தில்,பழமையான செங்கேணியம்மன் கோவில் அருகில் குளம் உள்ளது.

இந்த குளம், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் சுற்றியுள்ள கருங்கற்களால் ஆன கரைகள் உடைந்து, குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

மழைக்காலங்களில், அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் வரும் பாதைகள் முறையாக இல்லாததால், குளம் முழுமையாகநிரம்புவதில்லை.

இதன் காரணமாக, நிலத்தடி நீரின் அளவு குறைந்து, தண்ணீரின் சுவையும் மாறுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த குளத்தை துார் வாரிகரைகளை புதுப்பிக்க வேண்டும் என, கிராமமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us