Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குடிநீர் தொட்டி படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை

குடிநீர் தொட்டி படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை

குடிநீர் தொட்டி படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை

குடிநீர் தொட்டி படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், ஒரத்தி அருகே வடமணிப்பாக்கம் உள்ளது.இங்கு, 200க்கும் மேற்பட்ட குடுமபத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக, மாரியம்மன் கோவில் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

தொட்டியின் அடிபாகம் மற்றும் துாண்களின் சில பகுதிகளில் சிமென்ட் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.

ஆனால், சேதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், தொடர்ந்து நீர் ஏற்றப்பட்டு, குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே, ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us