/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பொன்மார் குட்டையில் ஆண் சடலம் மீட்பு பொன்மார் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
பொன்மார் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
பொன்மார் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
பொன்மார் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 18, 2024 06:11 AM
திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த பொன்மார் கிராமம், செல்லியம்மன் நகரில் கல்குட்டை உள்ளது. அங்கு ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று மாலை 3:00 மணிக்கு, தாழம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், சடலம் அழுகிய நிலையில் இருந்தது.
இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும், அவருக்கு 45 வயது இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். பிரதே பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசார்விசாரிக்கின்றனர்.